17. வருந்தும் பாவிகள்
நிலவற்ற
அமாவாசை இரவொன்றில்
பக்கத்து வீட்டுத் தொட்டத்தில்
புகுந்து
இருப்பதிலேயே
பெரிய பூசணியொன்றைத்
திருடினான் ஒருவன்.
திருட்டுப் பூசணியுடன்
வீடு வந்து சேர்ந்து
அறுத்துப் பார்த்தபோது
அதிர்ந்தான்.
இன்னும் பழுக்காத காய்!!
அப்போது தான்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அவன் மனசாட்சி
விழித்துக் கொண்டது.
அவனைக் கண்டித்தது.
செய்த பாவத்துக்கு
வருந்தினான் அவன்.